அம்ரிதாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் எழில் – பாக்கியலட்சுமியில் அடுத்த திருப்பம்!
ராதிகாவை திருமணம் செய்ய கோபி தயாராகி வரும் வேளையில், கோபியின் மகனான எழிலும் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் எழில் அம்ரிதா பின்னாடி சுற்றி கொண்டிருக்கிறார். என்ன தான் அம்ரிதா கணவனை இழந்த பெண் என்று தெரிந்தாலும் கூட அம்ரிதாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என எழில் நினைக்கிறார்.
குழந்தையோடு குழந்தையாகவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!
இந்நிலையில், அம்ரிதா படிக்கும் கல்லூரியில் சிலர் அம்ரிதாவை கிண்டல் செய்துள்ளனர். இதனால் அம்ரிதா மிகவும் மனமுடைந்து தனது அத்தை மாமாவிடம் கூறியிருக்கிறார். அம்ரிதாவின் அத்தை, மாமா இருவரும் எழிலுக்கு மிகவும் நெருக்கம் என்பதால் அம்ரிதாவை கிண்டல் செய்த அத்தனை விஷயங்களையும் எழிலிடம் கூறிவிடுகிறார். இதனால் உடனேயே அம்ரிதாவை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு செல்கிறார். அம்ரிதாவை கிண்டல் செய்தவர்களை அடித்து உதைக்கிறார்.
குழந்தையோடு குழந்தையாகவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!
இதையெல்லாம் கேட்க நீ யார் என கிண்டல் செய்தவர்களில் ஒருவர் கேட்கிறார். உடனே எழில் நான் அம்ரிதாவின் கணவன் என்று கூறி அம்ரிதாவிற்கே அதிர்ச்சியளிக்கும் வகையில் கூறுகிறார். இதற்கு பிறகு அம்ரிதாவும் வெக்கத்தை விட்டு எனக்கும் உன்னை பிடிக்கும் என கூறுகிறார். ராதிகாவை திருமணம் செய்ய அப்பா பிளான் பண்ணி கொண்டிருக்கும் வேளையில், மகனும் திருமணத்திற்காக பிளான் போட்டு கொண்டிருக்கிறார். விரைவில் அம்ரிதாவை எழில் திருமணம் செய்துகொள்ளும்படியான காட்சிகள் வர தான் போகிறது.