அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாக்கியா.. அதிர்ச்சியில் கோபி, ராதிகா – பாக்கியலட்சுமி ப்ரோமோ!
குடியிருப்போர் நல சங்க தேர்தலில் பாக்கியா போட்டி போடுவதை அறிந்து கோபி ராதிகாவை எதிர்த்து போட்டியிட வைத்தார். அந்த தேர்தல் முடிவுகள் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
எலக்சன் ரிசல்ட்:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தான் இந்த முறை குடியிருப்போர் நல சங்க தேர்தலில் வேட்பாளர் என்று ராமமூர்த்தி அறிவித்து, அதற்கான வேலைகளை செய்து வந்தார். இதை தெரிந்து கொண்ட கோபி, பாக்கியாவை இளக்காரமாக பேசியவுடன் உன்னால் முடிந்தால் நீ எதிர்த்து போட்டி போட்டு ஜெயித்து காட்டு என்று ராமமூர்த்தி சொல்ல ராதிகாவை தேர்தலில் கோபி நிற்க வைத்தார்.
Follow our Instagram for more Latest Updates
இரண்டு பக்கமும் பலமாக பிரசாரம் செய்து வந்தனர். ராதிகா தான் தேர்தலில் ஜெயிப்பார் என்று கோபி நம்பிக் கொண்டிருந்தார். இன்று வெளியான ப்ரோமோவில் அனைவரும் வரிசையில் நின்று வாக்கு செலுத்துகின்றனர். இறுதியாக வாக்கு எண்ணிக்கையில் ராதிகா 112 வாக்குகள் பெற்று உள்ளதாகவும், பாக்கியா 1268 வாக்குகள் பெற்று தேர்தலில் ஜெயித்து விட்டதாக அறிவிக்கின்றனர்.
ட்விட்டர் பயனர்களுக்கு புதிய வசதி – Character Limit 4000 ஆக அதிகரிப்பு.. எலான் மஸ்க் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனால் ராதிகா மற்றும் கோபி இருவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். எழில் மற்றும் செழியன் இருவரும் பாக்கியாவை தோளில் தூக்கிக் கொண்டு ஆடுகின்றனர். அனைவரும் மகிழ்ச்சியில் பாக்கியாவிற்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் வெளியாக உள்ளன.