ட்விட்டர் பயனர்களுக்கு புதிய வசதி – Character Limit 4000 ஆக அதிகரிப்பு.. எலான் மஸ்க் அறிவிப்பு!
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் பயனர்களின் வசதியை கருத்தில் கொண்டு ட்விட் செய்யப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ட்விட்டர் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ட்விட்டர்:
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு ட்விட்டர் நிறுவனத்திலும் செயலியிலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது. அதில் முதல் கட்டமாக ஊழியர்கள் பதவி நீக்கம் நடைபெற்றது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பாக ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி மாதம் சுமார் 700 ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது ட்விட்டரில் பதிவிடும் எழுத்துக்களின் உச்ச வரம்பு 4000 ஆக மாற்றப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
2023 பொங்கல் பரிசு.. தமிழகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் – மாவட்ட வாரியாக விநியோகம்!
Exams Daily Mobile App Download
ஆரம்பத்தில் ட்விட்களின் Character எண்ணிக்கை 140 ஆக இருந்தது. அதன் பிறகு ட்விட்டரில் எழுத்து உச்ச வரம்பு எண்ணிக்கை 240 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என்று பயனர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பயனர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு எழுத்துக்களின் உச்ச வரம்பு 240 லிருந்து 4000 உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.