திருமணத்தை நிறுத்த வரும் ஈஸ்வரி, ராதிகா கழுத்தில் தாலி கட்ட போகும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி வீட்டில் பதட்டமாக வெளியே கிளம்ப, ஈஸ்வரி என்ன ஆச்சு என கேட்கிறார். உடனே இன்று கோபி ராதிகா திருமணம் என சொல்ல, உடனே திருமணத்தை நிறுத்த கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் பாக்கியா திருமணத்தை நினைத்து வருத்தமாக இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி வீட்டில் இருக்க, இனியா புது ட்ரெஸ் போட்டு வருகிறார். ஈஸ்வரி என்ன இன்னைக்கு புது ட்ரெஸ் என கேட்க, ஸ்கூலில் பங்க்சன் என சொல்கிறார். பின் ராமமூர்த்தி வந்து தூங்கினால் எழுப்பமாட்டியா என கோவமாக கேட்கிறார். ஈஸ்வரி சீக்கரம் கிளம்பி எங்கே போக போறீங்க என கேட்க, உடனே ராமமூர்த்தி நான் சொல்லும் நிலைமையில் இல்லை என வெளியே கிளம்புகிறார். ஈஸ்வரி காபி கொடுக்க ஆனால் ராமமூர்த்தி காபியை தட்டிவிடுகிறார். என்னாச்சு இப்போ என ஈஸ்வரி கேட்க இன்று கோபி ராதிகாவின் கல்யாணம் என சொல்கிறார்.
அதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைய, இதில் பெரிய கொடுமை என்ன தெரியுமா, கோபி கல்யாணத்தில் சமையல் செய்வது நம்ம பாக்கியா என சொல்கிறார். ஈஸ்வரி இவ்வளவு தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கீங்க என கேட்க, ஜெனியும் இனியாவும் கல்யாணத்தை நினைத்து வருத்தப்படுகின்றனர். பின் ஈஸ்வரி இனியாவும் கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் ராதிகா கல்யாணத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறார். பாக்கியா சமையல் வேலைகளை முடித்துவிட செல்வியிடம் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என சொல்லி சந்தோசப்படுகிறார்.
அப்போது செல்வி பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகிறார். என் புருஷன் செய்தாலே என்னால் தாங்கி கொள்ள முடியாது ஆனால் நீ எப்படி இதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க போகிறாய் என கேட்கிறார். செல்வி நீ சொல்லு இப்பவே கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன். அப்பறம் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். ஆனால் பாக்கியா வேண்டாம் என சொல்கிறார். செல்வி பாக்கியாவை நினைத்து அழுகிறார். உனக்கு வருத்தமாக இருக்கா இல்லையா என செல்வி கேட்க ஆனால் பாக்கியா எதுவும் பேசாமல் அழுது கொண்டே வேலையை பார்க்கிறார்.
தமிழகத்தில் பொது மக்களுக்காக கூடுதலாக 1150 பேருந்துகள் இயக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மறுபக்கம் கோபி ராதிகா மேடைக்கு வர ஐயர் மந்திரம் சொல்கிறார். பின் ராமமூர்த்தி வேகமாக ஆட்டோவை ஓட்டி வர சொல்கிறார். ராதிகாவை ஐயர் அழைத்து வர சொல்ல, செல்வி மற்றும் சமைக்க வந்த பெண்கள் எல்லாம் பார்த்து இதெல்லாம் அநியாயம் என சொல்கிறார்கள். பின் ராதிகா கோபி மேடைக்கு வர, ஐயர் தாலியை ஆசிர்வாதம் செய்து கொண்டு வர சொல்கிறார். பாக்கியா தன்னுடைய கல்யாணத்தில் ஐயர் சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். ஈஸ்வரி வேகமாக வர, ஐயர் கல்யாணத்தில் தாலி எடுத்து கொடுக்கிறார், அப்போது பார்த்து ஈஸ்வரி இனியாவுடன் வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்