தமிழகத்தில் பொது மக்களுக்காக கூடுதலாக 1150 பேருந்துகள் இயக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நவராத்திரி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து
தமிழகத்தில் பண்டிகை மற்றும் விழா காலங்களில் விடுமுறைகளை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வர். இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் பயணிகளுக்கு உதவும் வகையிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் கூடுதலாக ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தமிழகத்தில் சரஸ்வதி, ஆயுத பூஜை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை ஆகியவைகள் ஒன்றாக வந்துள்ளது.
மத்திய அரசின் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் புதிய வகுப்புகள்- மாணவர் சேர்க்கை தகவல்கள்!
இந்த விடுமுறைகளை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் விடுமுறை கழிக்க திட்டமிட்டு பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை முதல் இன்று (அக். 4) விஜயதசமி என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு உதவ சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதே போல தற்போது பிற நகரங்களில் இருந்து மக்கள் பணிக்காக மீண்டும் சென்னை திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அக்.04 மற்றும் 05 ம் தேதிகளில் வழக்கமாக உள்ள 2100 பேருந்துகளுடன் சேர்ந்து 1,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தற்போது மக்கள் படையெடுத்து பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர். நாளை வேலை நாள் என்பதால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்