ராதிகாவை சாப்பாடை குறை சொல்லும் ராமமூர்த்தி.. கணவனை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவை சாப்பாடை குறை சொல்லும் ராமமூர்த்தி.. கணவனை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி - இன்றைய
ராதிகாவை சாப்பாடை குறை சொல்லும் ராமமூர்த்தி.. கணவனை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவை சாப்பாடை குறை சொல்லும் ராமமூர்த்தி.. கணவனை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி ராமமூர்த்தியை நினைத்து வருத்தமாக இருக்கிறார். பின் ராதிகா சமையல் செய்ய அதை ராமமூர்த்தி குறை சொல்கிறார். ஆனால் கோபி நன்றாக இருப்பதாக சொல்லி சாப்பிடுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவும் தாத்தாவும் விளையாடி கொண்டிருக்க, ராமமூர்த்தி ராதிகா உன்னை எதாவது பேசினாளா என கேட்கிறார். ஆனால் இனியா அவங்க நன்றாக தான் பேசுகிறார்கள் ஆனால் நான் பேசவில்லை என சொல்கிறார். பின் மயூரா வந்து நிற்க ராமமூர்த்தி அவளை அழைத்து விளையாட கூப்பிடுகிறார். பின் மயூராவை அமர வைத்து கேரம் விளையாடுகிறார். அப்போது கோபி கடைக்கு சென்றுவிட்டு வந்து அதை பார்த்து சந்தோசப்படுகிறார். ரூமிற்குள் ராதிகா கோவமாக அமர்ந்து இருக்க, கோபி வந்து ராதிகாவை வெளியே போக சொல்கிறார். மயூரா எவ்வளவு சந்தோசமாக இருக்கிறாள் என பார், நீ தான் என் குடும்பத்தினர் மதிக்கவே இல்லை என சொன்னாய், ஆனால் இப்போ நம்மை மதித்து தான் வந்திருப்பதாக சொல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

பின் மதியம் ஆகிவிட்டது சமையல் செய் என கோபி சொல்கிறார். ராமமூர்த்தியும் இனியாவிடம் பசிக்கிறதா என கேட்க ஆமாம் என இனியா சொல்கிறார். பின் கோபி அப்பா நன்றாக சாப்பிட்டு வளர்ந்தவர் என சொல்கிறார். பாக்கியா நன்றாக சாப்பாடு கொடுத்து மயக்கி வைத்திருக்கிறாள். நீயும் நன்றாக சமைத்து கொடுத்தால் அவர் உன் பக்கம் இருப்பார் என சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா எல்லாருக்கும் சாப்பாடு வைக்க ஈஸ்வரி ராமமூர்த்தியை நினைத்து கோவமாக இருக்கிறார். பின் ஜெனி செழியன் சாப்பிட வர ஆனால் ஈஸ்வரி சாப்பிடமாட்டேன் என சொல்கிறார். உடனே பாக்கியா இருக்கும் உங்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார்.

ஈஸ்வரி பாக்கியாவிற்காக சாப்பிட வருகிறார். சாப்பிடும் போது ராமமூர்த்தி பற்றி நினைத்து கவலைப்பட, உடனே செல்வி அந்த ராதிகா உன் புருஷனை கூட்டிக் கொண்டு சென்றாள், பின் இனியாவை அழைத்து சென்றாள், பின் அம்மாவின் வீட்டுக்காரரை அழைத்து சென்று இருக்கிறாள் அடுத்து ஜெனி நீ உஷாராக இரு என சொல்கிறார். பின் ஜெனி செழியனை கண்டிக்கிறார். மறுபக்கம் ராதிகா சமைத்து முடித்து ராமமூர்த்தியை எப்படி கூப்பிடுவது என தெரியாமல் இருக்கிறார். பின் கோபியை கூப்பிட எல்லாரும் சாப்பிட செல்கிறார்கள். ஆனால் ராமமூர்த்தி ராதிகா கூப்பிட காத்துக் கொண்டிருக்கிறார். பின் ராதிகா சாப்பிட கூப்பிட ராமமூர்த்தி வருகிறார்.

தமிழக கூட்டுறவு துறையின் சாதனைகள் குறித்து அமைச்சர் பெருமிதம் – ரூ.655 கோடி பயிர் கடன் தள்ளுபடி!

அப்போது ராதிகா சமைத்த குழம்பை பார்த்து இது என்ன கார குழம்பா என கேட்கிறார். இல்லை சாம்பார் என சொல்ல பருப்பு இல்லை என சொல்கிறார். பின் சோறு குக்கரில் செய்ய கூடாது என சொல்கிறார். கோபி சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்ல ராமமூர்த்திக்கு பிடிக்கவில்லை. ராதிகா வெறும் சாப்பாடு அப்பளம் மட்டும் வைத்து இருக்கிறார். பாக்கியா எப்படி சமைப்பாள் என ராமமூர்த்தி சொல்ல உடனே கோபியை ராதிகா முறைக்கிறார். பின் ராமமூர்த்தி இனியாவை ஆசை பட்டு வந்தாய் சாப்பிடு என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!