தமிழக கூட்டுறவு துறையின் சாதனைகள் குறித்து அமைச்சர் பெருமிதம் – ரூ.655 கோடி பயிர் கடன் தள்ளுபடி!
தமிழகத்தில் கூட்டுறவு துறையில் செய்துள்ள சாதனைகள் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அவர்கள் பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு துறை:
தமிழக அரசின் கூட்டுறவு துறை மூலம் மக்களுக்கு அதிக அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடலூரில் நேற்று கூட்டுறவு வார விழா நடந்துள்ளது. அதில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அவர்கள் பேசியுள்ளார். அப்போது, கடலூர் மாவட்டத்தில் உள்ள 29,000 மக்களுக்கு ரூ.114 கோடி நகைக்கடன் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை பெண்களுக்கான (நவ.22) வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனம் பங்கேற்பு !
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
மேலும், திமுக அரசு அறிவித்தது போல், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் ரூ.5,000 கோடி ரூபாய்க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 12,365 பேர் புதிதாக உறுப்பினராக சேர்க்கப்பட்டு ரூ. 64 கோடிக்கு கடன் வழங்கும் திட்டம் உள்ளது என்றும், தற்போது வரை ரூ.655 கோடி பயிர் கடன் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக ரூ.658 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.