தமிழகத்தில் நாளை பெண்களுக்கான (நவ.22) வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனம் பங்கேற்பு !
ஓசூரில் அமைந்துள்ள முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.22) தஞ்சாவூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் தனியார் துறைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நோக்கிலும் தங்களது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக ஏராளமானோர் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். மற்ற நிறுவனங்களை தொடர்ந்து இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா எலக்ட்ரானிக் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் சின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமானது தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 12ம் வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், டிகிரி முடித்த பெண்கள் பங்கேற்கலாம்.
UPSC CDS 2022: தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Result வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் வயது வரம்பு 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவர குறிப்பு, கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 8110919990, 9442557037 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.