கோபி செய்யும் ஷாக் சம்பவம், தொழிலை மீண்டும் தொடங்கும் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ அடுத்து வருபவை!
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தனது கேட்டரிங் தொழிலை கவனம் செலுத்த தொடங்குவது போல் காட்சிகள் வர உள்ளது. இதற்கு கோபி செய்யும் ஒரு முக்கிய செயல் தான் காரணமாக மாற இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி தொடர் சில வாரங்களாக டிஆர்பி யில் பின்தங்க தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் பாக்கியா மீண்டும் கவலையில் மூழ்க தொடங்கி விட்டது போலவும், அதை பற்றியே கதை செல்வது போலவும் உள்ளது தான். பாக்கியா எப்போது அதிரடியான முடிவுகளை எடுப்பது போல் கதையில் மாற்றங்கள் வருகிறதோ, அப்போது தான் மக்களும் அதிக ஆதரவை சீரியலுக்கு தருகின்றனர். இதனால் தற்போது கதையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது.
கோபியின் தற்போதைய நிலைக்கு பாக்கியா தான் காரணம் என்று ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா மூவரும் கூறி வருகின்றனர். அதே போல், ராதிகாவின் அம்மாவும், உண்மையாகவே பாக்கியா சரி இல்லை தான் போல உள்ளது. அதனால் தான் கோபி இந்த முடிவிற்கு வந்திருப்பார் என்று கூறுகிறார். இதனால் பாக்கியா மேலும், சோர்வடைகிறார். தொடர்ந்து நடக்கும் இது போன்ற நிகழ்வுகளால் தனது தொழிலை கவனிக்க விடுகிறார். இதனால் பண பற்றாக்குறை ஏற்படுகிறது.
திருப்பதி – புதுச்சேரி பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு – ரயில்கள் தாமதம்!
ஆனால், கோபி ராதிகாவை பேசி சம்மதிக்க வைத்து, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது போலவும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது பாக்கியா கஷ்டப்படுவது போலவும் காட்சிகள் வர உள்ளது. இதன் பிறகு, பாக்கியா சுதாரித்து தனது கேட்டரிங் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்து, கடுமையாக உழைத்து முன்னேறுவது போல் காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் வர உள்ளது. அதன்பிறகு, என்ன மாதிரியாக கதை நகர உள்ளது என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்