ஜீவாவை அவமானப்படுத்தும் ஜனா, கடைக்கு செல்ல விடாமல் செய்ய திட்டம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதால் குடும்பமே வருத்தத்தில் இருக்கும் நிலையில் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் ஜீவா கதாபாத்திரத்தை வைத்து பல திருப்பங்கள் கொண்டு வர இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக குடும்பங்களில் நடக்கும் விஷயமாக இருந்தாலும் அதில் சுவாரஸ்யங்கள் அதிகமாக வைக்கப்படுவதால் பல ரசிகர்கள் விரும்பி இந்த சீரியலை பார்க்கின்றனர். இந்த சீரியலில் குழந்தை இல்லாத பெண்களின் கஷ்டங்களை பற்றி இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. என்ன தான் குடும்பமே ஆறுதலாக இருந்தாலும் முல்லைக்கு சமாதானம் ஆக முடியவில்லை.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, வருத்தப்படும் முல்லை – அடுத்து வரும் எபிசோட்!
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ஜீவாவை வைத்து பல பிரச்சனைகள் வர இருக்கிறது. ஜீவாவை மீனாவின் அப்பா உடல்நிலை சரியாகும் வரை அவரது தொழிலை பார்த்துக் கொள்ள சொல்லி மூர்த்தி சொல்ல ஜீவாவும் அவரது கடையை பார்த்துக் கொள்கிறார். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை பார்க்காமல் இருக்க முடியாமல் இருப்பதால் அவர் வருத்தமாக இருக்கிறார். கடைக்கு வந்தாலும் வேலைகள் எதுவும் கொடுக்காமல் இருப்பதால் ஜீவாவிற்கு ஒதுக்கப்படுவதாக எண்ணம் இருக்கிறது.
மேலும் ஜனார்த்தனன் இனிமேல் ஜீவா அவரது கடைக்கு போகவே கூடாது என்பதற்காக பல வேலைகளை செய்கிறார். ஜீவாவிற்கு வேண்டும் என்றே வேலைகளை சொல்ல அதனால் ஜீவாவிற்கு கடை மீது ஏக்கம் அதிகமாக வருகிறது. மேலும் அவர் பல வேலைகளை செய்து ஜீவாவை அவமானப்படுத்த அதனால் ஜீவா தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதால் இங்கேயே வேலை செய்யப் போகிறார். இது குறித்த காட்சிகள் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.