‘குழந்தை இல்லாத வலி எனக்கு தெரியும்’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் ஓபன் டாக்! வைரலாகும் வீடியோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா சீரியலில் தனது பயணம் பற்றி மனம் திறந்து சொல்லி இருக்கிறார். மேலும் குழந்தை இல்லாத வேதனை எனக்கு நன்றாக தெரியும் ஆனாலும் கதையில் பல நல்ல விஷயங்கள் இருப்பதாக பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல் ஆகும். இந்த சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாத ஒரே சீரியல் என்ற பெருமைக்குரியது. இந்த சீரியலின் ஆணி வேராக தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். அவர் சீரியலில் நடித்து வரும் பயணம் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்துவிட்டதா என கேட்க, அது தெலுங்கில் வதினம்மா சீரியல் தான் முடிந்துள்ளது.
கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் இனியா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!
இந்த சீரியலில் கதை நிறைய எபிசோடுகள் கடந்துள்ளது. அதனால் சீரியலை நல்லபடியாக முடித்துவிட்டோம் என சொல்லி இருக்கிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு குழந்தை இல்லை என்ற விஷயம் அனைத்து பெண்களையும் பாதிக்கும். அந்த கதையில் என்னுடைய கதாபாத்திரம் குழந்தை இல்லாதது போல தொடங்கப்பட்டு தற்போது குழந்தை கிடைத்துள்ளது, அந்த தருணங்களை நான் உண்மையாக அனுபவித்து நடித்தேன் என சொல்லி இருக்கிறார்.
குழந்தை இல்லை என்ற வலி எப்படி இருக்கும் என நிறைய பேரை நான் பார்த்து இருக்கிறேன். அது போல ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என சொன்ன அவர், தற்போது முல்லைக்கு குழந்தை இல்லாததை குடும்பமே நினைத்து கவலைப்படுகிறது அது தான் சீரியலின் வெற்றி என சொல்லி இருக்கிறார். மேலும் பாண்டியன் பிறந்த தருணம் உண்மையாவே என் கண்ணில் தண்ணீர் வந்ததாக சுஜிதா மனம் உருகி தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார். மேலும் சுஜிதா அவருக்கு குழந்தை பிறந்து நடிப்பில் இடைவெளி எடுத்துவிட்டு பின் சீரியலில் என்ட்ரி கொடுத்ததற்கு மக்கள் கொடுத்த வரவேற்ப்பு மிகவும் உற்சாகமாக இருப்பதாக அவர் சொல்லி இருக்கிறார்.