கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் இனியா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!

0
கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் இனியா? 'பாக்கியலட்சுமி' சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!
கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் இனியா? 'பாக்கியலட்சுமி' சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!
கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் இனியா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் கோபி, தான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது பற்றி இனியாவிடம் பேசிக்கொண்டிருக்க, அடுத்ததாக இனியாவுக்கு தான் கோபி பற்றிய உண்மைகள் தெரியவருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல்

ஒரு அப்பாவியான குடும்பத் தலைவியும், அவரை ஏமாற்றி இன்னொரு பெண்ணை காதலித்து வரும் கணவனும் என்ற கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல். பார்ப்பதற்கு அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு அத்தனை திருட்டுத் தனங்களையும் செய்து வரும் கோபி எப்போது தனது குடும்பத்திடம் அதுவும் முக்கியமாக பாக்கியாவிடம் மாட்டுவார் என எக்கச்சக்கமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இந்த கதையை பொறுத்தமட்டில் இதுவரை செல்வி, எழில் மற்றும் ராமமூர்த்தியிடம் சிக்கி இருக்கும் கோபி அடுத்ததாக யாரிடம் கையும் களவுமாக பிடிபடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோபியுடன் வாழ மாட்டேன் சொன்ன பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!

ஆனால், ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு காரணத்தை சொல்லி தப்பிக் கொண்டிருக்கிறார் கோபி. இப்படி இருக்க இன்றைய ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் எபிசோடில் கோபி, தான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது குறித்து இனியாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அதாவது, பள்ளிக்கு செல்லும் இனியா மற்றும் கோபி இருவரும் பாக்கியாவை கழட்டி விட்டு ஹோட்டலுக்கு சாப்பிட செல்கின்றனர். அப்போது, பாக்கியா மாடர்ன் ஆக இல்லை என்றும் எதற்கெடுத்தாலும் குறை சொல்வதாகவும் கோபியிடம் கூறுகிறார் இனியா. அப்போது மாடர்ன் ஆக இருக்கும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டுமா என்று கோபி மெதுவாக பொடி போட முதலில் அதிர்ச்சியாகிறார் இனியா.

கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறிய நபர் – நம்ப மறுத்த பாக்கியா!

பிறகு இது சும்மா தான் கேட்டேன் இனியா என கூறும் கோபி, நானும் உன் அம்மாவும் பிரிந்தால் நீ என்னுடன் இருப்பாயா, அம்மாவுடன் இருப்பாயா என்று கேட்கிறார். அப்போது, நான் உங்களோடு தான் இருப்பேன் டாடி. அம்மா சுத்த போர் என்று பதிலளிக்கிறார் இனியா. இதனை கேட்கும் கோபிக்கு உற்சாகம் பொங்கி வழிகிறது. இப்போது இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இனியாவுக்கு கோபியின் திருட்டுத் தனங்கள் எல்லாம் தெரிந்தால் என்ன முடிவு எடுப்பார் என்றும் அப்போது கோபி அடுத்ததாக இனியாவிடம் தான் சிக்குவாரா என்றும் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!