IND vs SA முதல் ஒருநாள் போட்டி: 6வது பௌலிங் ஆப்ஷனாக வெங்கேடேஷ் ஐயர்! KL ராகுல் பேட்டி!
இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் KL ராகுல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் பிளேயிங் 11 வீரர்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.
KL ராகுல் பேட்டி:
இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. ஜனவரி 15 ஆம் தேதி முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை கைப்பற்ற தவறியது. இதனை தொடர்ந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலகினார். இதனால் விராட் கோஹ்லி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI அடுத்த டெஸ்ட் கேப்டனை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – விரைவில் முக்கிய அறிவிப்பு!
இன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள போலந்து மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்தியா, தென்னாபிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விராட் கோஹ்லி ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் BCCI ரோஹித் சர்மாவை ஒரு நாள் மற்றும் T20 கேப்டனாக நியமித்தது. தற்போது ஹாம்ஸ்டிரிங் காயம் காரணமாக ஒரு நாள் போட்டிகளில் இடம்பெறவில்லை. ரோஹித்துக்கு பதில் KL ராகுல் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இன்று விளையாட போகும் இந்திய அணியின் பிளேயிங் 11 குறித்து நேற்று KL ராகுல் பேட்டியளித்தார்.
Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மொபைல் செயலி அறிமுகம்!
ஒரு நாள் போட்டிகள் குறித்து KL ராகுல் கூறுகையில் ரோஹித்துக்கு பதில் ஒபெனிங்கில் நான் இறங்குவேன் என்று கூறினார். மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் முதல் ஒரு நாள் போட்டியில் தமிழ்நாடு வீரர் வெங்கடேஷ் ஐயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்திய அணிக்கு 6வது பௌலராக ஐயர் உதவுவார் என்று நம்புவதாக கூறியுள்ளார். போலந்து மைதானத்தில் ஸ்பின் பௌலிங்கில் அதிக விக்கெட் விழுங்க வாய்ப்பு உள்ளதால் அஸ்வின் மற்றும் சஹால் அணியில் இடம் பெற உள்ளனர் என்றும் தொடக்க வீரராக தவானும் களம் இறங்கவுள்ளோம் என்றும் பேட்டியளித்தார்.