Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மொபைல் செயலி அறிமுகம்!

0
Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - மொபைல் செயலி அறிமுகம்!
Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - மொபைல் செயலி அறிமுகம்!
Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மொபைல் செயலி அறிமுகம்!

மத்திய அரசு பொது மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் அஞ்சல் துறையில் உள்ள அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தே பெறும் வகையில் மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

புதிய மொபைல் செயலி:

நாடு முழுவதும் பெரும்பாலானோர் தங்களது எதிர்கால தேவை குறித்து திட்டமிட்டு வருகின்றனர். அவ்வாறு திட்டமிடும் அனைவருக்கும் உதவும் வகையில் மத்திய அரசு அஞ்சல் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா பெருந்தொற்று போன்ற பேரிடர் காலகட்டத்தில் உதவ சேமிப்பு ஒன்றே சிறந்த வழியாகும். அதனால் சேமிக்க திட்டமிடுவோர் அஞ்சல் துறையில் தங்களது சேமிப்பை தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அஞ்சல் துறை சேமிப்பு திட்டம் மிகவும் பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு – கல்வித்துறை அறிவிப்பு!

இவ்வாறு அஞ்சல் துறையில் மக்களின் நாட்டம் அதிகரிப்பதால் மத்திய அரசும் அஞ்சல் துறையில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறது. அதாவது அஞ்சல் துறை பற்றிய அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் அஞ்சல் நிலையத்திற்கு வர வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். எனவே மத்திய அரசு அஞ்சல் துறை சேவைகளை வீட்டிலிருந்தே மக்கள் பெறும் வகையில் ‘போஸ்ட் இன்போ’ மொபைல் செயலி ஒன்றை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஏனெனில் பெரும்பாலும் அரசு துறை சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளும் வகையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 28 வரை ஊரடங்கு, ஜிம்கள் 50% திறனில் இயங்க அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தற்போதும் கொரோனா பெருந்தோற்று பரவிய நிலையில் இருந்து வருவதால் இந்த மொபைல் செயலியை பயன்டுத்தி அஞ்சல் துறை சார்ந்த சேவைகளை பெறுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த போஸ்ட் இன்போ மொபைல் செயலியை கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், மணியார்டர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த மொபைல் செயலி மூலம் அஞ்சல் நிலையங்களை கண்டறிய, புகார் கண்காணிக்க, போஸ்டேஜ் கால்குலேட்டர், இன்சூரன்ஸ் ப்ரீமியம் மற்றும் வட்டி கால்குலேட்டர் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும். கொரோனா காலகட்டத்தில் இந்த மொபைல் செயலி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!