தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு – கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு - கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு - கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு – கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் நேற்றுடன் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் இன்று முதல் பள்ளிகளில் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள் வருகை:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முன்னதாக நேரடி வகுப்புகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தது. நடப்பு கல்வியாண்டில் தான் தொற்று நிலைமை கட்டுக்குள் வந்து, அரசின் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அரசின் உரிய வழிகாட்டுதல்களின் படி பள்ளிகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதலும், 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதலும் பள்ளி செயல்பட தொடங்கியது.

பள்ளிகள் மிகவும் தாமதமாக செயல்பட தொடங்கியதால் மாணவர்களுக்கு தேர்வு சுமையை குறைக்கும் நோக்கில் நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் டிசம்பர் மாத இறுதியில் வழக்கமாக விடப்படும் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம் போல் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் முன்னதாக மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

ஜனவரி 28 வரை ஊரடங்கு, ஜிம்கள் 50% திறனில் இயங்க அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னதாக திட்டமிட்ட படி திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 18ம் தேதி வரை அனைவருக்கும் முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி 19ம் தேதியான இன்று முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் என்றும், முன்னதாக நடந்து வந்த நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!