ஜனவரி 28 வரை ஊரடங்கு, ஜிம்கள் 50% திறனில் இயங்க அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஹரியானா மாநிலம் முழுவதும் தற்போது அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் வருகின்ற ஜனவரி 28ம் தேதி வரை அரசு சில கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது. இது குறித்த புதிய வழிகாட்டுதல்களை விரிவாக காணலாம்.
புதிய கட்டுப்பாடுகள்
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளுக்கு மத்தியில், ஹரியானா மாநிலம் முழுவதும் ஏற்கனவே அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 28ம் தேதி வரை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 5ம் தேதி அன்று ஹரியானாவில் அதிகபட்ச கொரோனா வழக்குகளை பதிவு செய்த “குரூப் ஏ” மாவட்டங்களில் மட்டும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
பின்னர் ஹரியானாவின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற தடைகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ஹரியானாவின் கர்னால், பானிபட், ரோஹ்தக், ஜஜ்ஜார், குருகிராம், ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்குலா உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும் தற்போது ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (HSDMA) ஜனவரி 5, 10 மற்றும் 13 ஆம் தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஜனவரி 28ம் தேதி வரை செயல்படுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் முன்பு போலவே ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் இப்போது 50 சதவீத திறன் பயன்பாட்டுடன் செயல்படலாம். மதுபான விற்பனைகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஹரியானாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி,
- திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- குழு A மாவட்டங்களில் (11 மாவட்டங்கள்) ஜனவரி 5 தேதியிட்ட உத்தரவின்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்ற எட்டு மாவட்டங்களிலும் விதிக்கப்படும்.
- மால்கள் மற்றும் சந்தைகள் மாலை 6 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- பால், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்து நேரங்களிலும் திறக்க அனுமதிக்கப்படும்.
- அனைத்து விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் மைதானங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் போது தவிர மற்ற நேரங்களில் மூடப்பட்டிருக்கும்.
- அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் B2B கண்காட்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
- அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அவசர அல்லது அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் 50 சதவீத பணியாளர் வருகையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாநிலத்தில் தினசரி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கிடையில் ஹரியானாவில் நேற்று (ஜன.18) ஒரே நாளில் 8,388 புதிய வழக்குகள் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்