அரங்கேறும் வேலன், வள்ளியின் திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!
ராகவனை தான் திருமணம் செய்துகொள்ள போகிறோமோ என நினைத்து வள்ளி விஷம் குடிக்கிறார். இதற்கு பிறகு வள்ளி உயிர் பிழைப்பாரா, வேலன் மற்றும் வள்ளியின் திருமணம் நடைபெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
வேலைக்காரன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வேலைக்காரன் சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில், வேலன் கதாபாத்திரத்தில் சபரி, வள்ளி கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியா, விசாலாட்சி கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகையான சோனா நாயர் மற்றும் ராகவன் கதாபாத்திரத்தில் சத்யாவும் நடித்து வருகிறார்.
தமிழக அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்ற அனுமதி? முதல்வரின் நடவடிக்கை!
வேலைக்காரன் தொடர் அப்படியே 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தின் கதை போலவே இருப்பதால் பல விமர்சனங்களை பெற்றது. ஜமீன் குடும்பத்தின் உண்மையான வாரிசான வேலன் அந்த குடும்பத்தில் வேலைக்காரனாக அறிமுகமாகிறார். பின்பு, வேலன் தான் ஜமீன் குடும்பத்தின் உண்மையான வாரிசு என்பதை தெரிந்துகொண்ட ராகவன் வேலனுக்காக பல உதவிகளை செய்கிறார். அதாவது முதலில் வேலன் தான் வள்ளியை காதலித்து கொண்டிருக்கிறார். பின்பு, ராகவன் வள்ளியை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்கிற விஷயம் தெரிந்ததும் ராகவனுக்காக விட்டு கொடுக்க நினைக்கிறார்.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – அரசுக்கு பரிந்துரை!
இதனால் வள்ளியையும், வேலனையும் சேர்த்து வைக்க வேண்டும் என நினைத்து ராகவன், வேலனும் வள்ளியும் காதலிக்கிறார்கள் என கூறிவிடுகிறார். இதற்கு இடையே ராகவனை தான் திருமணம் செய்துகொள்ள போகிறோமோ என நினைத்து வள்ளி விஷம் குடிக்கிறார். வள்ளி உயிர் பிழைப்பாரா எனவும், வேலனுடன் வள்ளியை ராகவன் சேர்த்து வைப்பாரா எனவும், வேலன் மற்றும் வள்ளியின் திருமணம் நடக்குமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.