தமிழக அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்ற அனுமதி? முதல்வரின் நடவடிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்ற அனுமதி? முதல்வரின் நடவடிக்கை!
தமிழக அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்ற அனுமதி? முதல்வரின் நடவடிக்கை!
தமிழக அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்ற அனுமதி? முதல்வரின் நடவடிக்கை!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. ஆனால் தற்போது அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி கொள்வதற்கான நடைமுறையை இன்னும் தடை விதித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஈட்டிய விடுப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் நிதி நிலையை சமன் செய்ய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைத்தது. தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% அகவிலைப்படியை தமிழக அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து பெண் அரசு ஊழியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அரசு ஊழியரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அந்த அரசு ஊழியருக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் முழுவதுமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாக பெற்று கொள்ளலாம். இதனை கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் கடந்த ஆண்டும் இதற்கு தொடர்ந்து தடை நீடித்தது. மேலும் இந்த ஆண்டும் இதற்கான தடை தொடரும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் கூறியதாவது, இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் போராட்ட உணர்வை தூண்டுகிறது. மேலும் தமிழக முதல்வர் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி கொள்ளும் நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!