‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறிய வனிதா – இதற்கு தானாம்? புதிய விஜேவாக சிம்பு அறிமுகம்!

0
'பிக் பாஸ்' அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறிய வனிதா - இதற்கு தானாம்? புதிய விஜேவாக சிம்பு அறிமுகம்!
'பிக் பாஸ்' அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறிய வனிதா - இதற்கு தானாம்? புதிய விஜேவாக சிம்பு அறிமுகம்!
‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறிய வனிதா – இதற்கு தானாம்? புதிய விஜேவாக சிம்பு அறிமுகம்!

தற்போது ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் வனிதா அதிரடியாக வெளியேறி இருக்கும் நிலையில், இந்த ஷோவின் புதிய தொகுப்பாளராக சிம்பு அறிமுகம் செய்யப்பட இருக்கிறார் என்ற உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது.

பிக் பாஸ் வனிதா

கடந்த 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறுவடிவமான ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோ டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவானது மொத்தம் 75 நாட்கள் என்ற கணக்கில், ஒரு நாளில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. ஆரம்பத்தில் பல்வேறு அதிரடியான போட்டியாளர்களுடன் களம் கண்டு வந்த இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் கடந்த 3 வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக இனி இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அந்த வகையில் இப்போது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோ துவங்கி 25 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் வழக்கம் போல வனிதா, பாலா, ஜுலி ஆகியோருக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே ‘பிக் பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியில் ஸ்ட்ராங் ஆன போட்டியாளராக காணப்பட்ட வனிதா இம்முறையும் துவக்கத்தில் இருந்து பல பிரச்சனைகளில் தலையிட்டு வந்தார்.

தவிர பாலாவுடன் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் காயப்பட்ட வனிதா பிக் பாஸை சந்தித்து தான் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கதறி அழுதிருந்தார். எப்போதும் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் சிங்கம் போல சுற்றி வந்த வனிதா உடைந்த அழுதது பார்ப்பவர்களுக்கு சற்றே வருத்தத்தை கொடுத்திருந்தது. ஆனால் இந்த எல்லா விஷயங்களையும் கமலுக்காக மட்டுமே பொறுத்துக்கொண்டு இருப்பதாக சொல்லி இருந்த வனிதா திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இது தொடர்பான ப்ரோமோ மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தவிர வனிதாவின் இந்த வெளியேற்றம் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் ஷாக் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் திரைப்பட படப்பிடிப்பு காரணமாக ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக கலந்துகொள்ள முடியாததாக கூறி கமல்ஹாசன் விலகி இருக்கிறார்.

சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!

இவருக்கு பதிலாக இந்த ஷோவை யார் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவ்வப்போது ரம்யா கிருஷ்ணன் பெயர் அடிபட்டு வந்தது. இப்போது இந்த தகவல் அறிந்ததும், எப்படியாவது ரம்யா கிருஷ்ணன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எண்ணத்தில் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நடிகர் சிம்பு தான் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்க இருக்கும் தகவல் உறுதியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!