விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வைதேகி காத்திருந்தாள்’ புதிய சீரியலின் ப்ரோமோ – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பட இருக்கிறது. அந்த சீரியல் குறித்த லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய சீரியல்
தற்போது ரசிகர்கள் பலரும் சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான் அதிகமாக விரும்பி பார்க்கின்றனர். இதனால் அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதே போல் பல புதிய கதைகளுடன் புதிய சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் ‘முத்தழகு’ என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை இந்த சீரியல் எடுத்து உள்ளது என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பட இருக்கிறது. அதற்கான லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற இந்த சீரியலில் நடிகர் ப்ரஜின், நடிகை சரண்யா மற்றும் பழம்பெரும் நடிகை லதா ஆகியோர் நடித்து இருக்கின்றனர். சிறு வயதில் தொலைந்து போன வைதேகி இந்த வீட்டிற்கு வர போகிறாள் என்று கூறி ப்ரோமோ ஆரம்பிக்கிறது. வைதேகியாக நடிப்பதற்கு நடிகை சரண்யா வருகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகும் ஹீரோ அருண்? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?
அங்கு நடிகை லதா காட்டும் புகைப்படத்தினை பார்த்து தனது அம்மா தான் இது என்பதனை உணர்ந்து கொள்கிறார். ‘ஒரு ராணியே ராணியாக நடிக்க வருகிறாள்’ என்று கூறி ப்ரோமோ முடிவடைகிறது. புதிதாக ஒளிபரப்ப இருக்கும் இந்த சீரியலை எதிர்பார்த்து பல ரசிகர்களும் காத்து கொண்டு இருக்கின்றனர். தொடர்ந்து பழைய சீரியல்களை பார்த்து வரும் சீரியல்களுக்கு மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பினை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.