‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகும் ஹீரோ அருண்? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?

0
'பாரதி கண்ணம்மா' சீரியலை விட்டு விலகும் ஹீரோ அருண்? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?
'பாரதி கண்ணம்மா' சீரியலை விட்டு விலகும் ஹீரோ அருண்? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?
‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகும் ஹீரோ அருண்? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகர் அருண் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

சீரியல்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி இடம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது, விஜய் தொலைக்காட்சி. அந்த சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதன்மையாக இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியல் கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஹேமா, லட்சுமியுடன் இணைந்த பாரதி கண்ணம்மா – நம்ம வீட்டு திருவிழா! ரசிகர்கள் உற்சாகம்!

இதில் தற்போது வெண்பா அஞ்சலிக்கு செய்திருக்கும் மோசடி பற்றி தெரிந்து கொள்கிறார் பாரதி. இதனால் மிகவும் கோபம் அடைந்து சண்டை போடுகிறார். தன்னிடம் இனி பேசவே வேண்டாம் என்றும் கூறி விடுகிறார். இது ஒரு புறம் இருக்க, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்களது குழந்தைகளுடன் 6 மாதங்கள் இருக்க வேண்டும் என்று கூறி விடுகின்றனர். பாரதியும் கண்ணம்மா வீட்டில் தங்குவதற்கு ஒத்து கொள்கிறார். இப்படி பல வித திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ரோஷினி சில காரணங்களாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகை வினுஷா தேவி இந்த சீரியலில் நடித்து வருகிறார். இதுவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண் இந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் கூறப்பட்டது.

சன் டிவி ‘நாயகி’ சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அதில் தான் தற்போது தான் அருணாக உணர்வதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அவர் முன்கூட்டியே ஷூட்டிங் முடித்து விட்டதாகவும், தற்போது விடுமுறையில் இருப்பதால் இந்தியாவில் உள்ள சில இடங்களை சுற்றி பார்த்து கொண்டு இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!