சன் டிவி ‘நாயகி’ சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை வித்யா பிரதீப் க்கு திடீர் திருமணம் நடந்து விட்டதாக, அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திடீர் திருமணம்:
வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க முதல் படிக்கட்டாக சின்னத்திரையை பயன்படுத்தி வெற்றி பெற்ற நடிகர்கள் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெள்ளித்திரையில் பிரபல நட்சத்திரங்களாக நடிக்கும் வாய்ப்புகளை சின்னத்திரையில் நடித்துக் கொண்டே தேடி வந்தனர். இதேபோல், வெள்ளித்திரையில் அதிக பிரபலமாக உள்ள நட்சத்திரங்கள் மூலம் சீரியல் நல்ல ரீச் அடையும் என்று எதிர்பார்த்து வெள்ளித்திரை நடிகர்களை சின்னத்திரைக்கு அழைத்து வந்து, அவர்களும் சீரியல் மூலமாக பிரபலமடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கமலுக்கு பதிலாக பிக் பாஸில் என்ட்ரி கொடுத்த ரம்யா கிருஷ்ணன் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
அந்த வகையில் சன்டிவியில் நாயகி என்ற சீரியல் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 19 முதல் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரை வெற்றி தொடராக ஒளிபரப்பாகியது. இந்த தொடரின் நாயகியாக முதலில் விஜயலக்ஷ்மி நடித்து வந்தார். அதன்பின்னர், அவருக்கு பிக்பாஸ் சீசன் 2 விற்கான வாய்ப்புகள் வரவே அவர் விஜய் டிவிக்கு சென்று விட்டார். அதன்பிறகு, சினிமாவில் பல படங்களிலும் சிறு சிறு வேடங்களை செய்து வந்த நடிகை வித்யா பிரதீப் இந்த தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். இவர், சைவம், பசங்க 2, அதிபர், ஒண்ணுமே புரியல, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்னரே தாலியுடன் வீடியோ வெளியிட்ட ‘செம்பருத்தி’ ஷபானா – ரசிகர்கள் ஷாக்!
வித்யா மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழி சினிமாக்களிலும் நடித்துள்ளார். இருப்பினும், நாயகி தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்படும் நடிகையாகி விட்டார். இதன் பிறகு தடம், அசுரகுலம், ஒத்தைக்கு ஒத்தை,மாரி 2 போன்ற பல வாய்ப்புகளையும் பெற்றார். இந்நிலையில், வித்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கழுத்தில் தாலி மற்றும் மாலையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார். இதனால் அவருக்கு திடீர் திருமணம் நடந்து விட்டதாக கூறி வந்தனர். இந்நிலையில், அது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் என்பதை வித்யா அறிவித்துள்ளார்.