தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் மிககனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் கனமழை:
இந்தியாவில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதிலும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு நிலவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இதுவரை 1000 மிமி அளவு மழை பதிவாகியுள்ளது.
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள் – முழு விபரம் இதோ!
இத்தகைய தொடர் மழை காரணமாக பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தெற்கு அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அவ்வாறு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து சென்று வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நவ.30ம் தேதி முதல் டிச.2ம் தேதி வரை ஓரிரு நாட்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.