தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தடுப்பூசி முகாம் நடத்த திட்டம்!
கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்து பழைய நிலைக்கு மாறிவந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவை குழந்தைகளை பாதிக்காத விதம் முன்னதாகவே பயோலாஜிக்கல்-இ நிறுவனம் கண்டறிந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கோர்பேவாக்ஸ் தடுப்பூசி:
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகிற ஜூன் 13ல் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஜூன் 20ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கும், 27ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருவதால் அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதில் ஒன்றாக தற்போது குழந்தைகளின் நலனுக்காக தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது தமிழக அரசு.
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – விரைவில் வெளியாக உள்ள ஹாப்பி நியூஸ்!
அதாவது பயோலாஜிக்கல்-இ நிறுவனம் கண்டறிந்த ‘கோர்பாவேக்ஸ்’ தடுப்பூசி முன்னதாகவே 12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது குழந்தைகளின் நலனுக்காக மீண்டும் தடுப்பூசி போடும் விதமாக அந்தந்த மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் ஆலோசித்து, மேல்நிலை, உயர்நிலை பள்ளி அளவில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஏனெனில் முன்னதாக தடுப்பூசி செலுத்தப்பட்ட போது சில மாவட்டங்களில் 85 சதவீத மாணவர்களும், ஒரு சில மாவட்டங்களில் 65 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதாவது தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்குரிய தடுப்பூசியை 24.45 லட்சம் பேரும், 15 முதல் 17 வயதுக்குரிய தடுப்பூசியை, 43.48 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வயது வாரியாக தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு கொடுப்பதற்கு ஏதுவாக முன்கூட்டியே முகாம் அமைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.