TNUSRB PC கான்ஸ்டபிள் 10,000+ காலிப்பணியிடங்கள் – இளைஞர்கள் கவனத்திற்கு! விரைவில் அறிவிப்பு!

0
TNUSRB PC கான்ஸ்டபிள் 10,000+ காலிப்பணியிடங்கள் - இளைஞர்கள் கவனத்திற்கு! விரைவில் அறிவிப்பு!
TNUSRB PC கான்ஸ்டபிள் 10,000+ காலிப்பணியிடங்கள் - இளைஞர்கள் கவனத்திற்கு! விரைவில் அறிவிப்பு!
TNUSRB PC கான்ஸ்டபிள் 10,000+ காலிப்பணியிடங்கள் – இளைஞர்கள் கவனத்திற்கு! விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் TNUSRB தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இது குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

காவல் துறையில் வேலை:

தமிழக காவல் துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி நிலவரப்படி தமிழக காவல்துறைக்கு 1,33,198 காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டது. அப்போது 1,18,881 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இதற்கிடையில் காலியிடங்களை நிரப்ப TNUSRB தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Post Office தினமும் ரூ.95 சேமித்தால் ரூ.14 லட்சம் பெறலாம் – சிறந்த சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!

அதன்படி கடந்த ஆண்டு 11,813 காவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ம் தேதி நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 5.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 4.90 லட்சம் பேர் மட்டும் தேர்வு எழுதினர். இந்த எழுத்து தேர்வின் முடிவில் 1:5 என்ற விகிதத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த பிப்.19ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. பின்னர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் முடிவுற்ற நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதார அமைச்சர் விளக்கம்!

தற்போது தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் முதல் 8 மாதங்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு படை வீரர்கள் உள்ளிட்ட பதவிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 450 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்வர்கள் தங்களை முறையே தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!