Post Office தினமும் ரூ.95 சேமித்தால் ரூ.14 லட்சம் பெறலாம் – சிறந்த சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள கிராம சுமங்கல் திட்டம் மூலம் நீங்கள் தினமும் ரூ.95 சேமித்து 14 லட்ச ரூபாய் வரை பெறலாம். இத்திட்டத்தின் முழு விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கிராம சுமங்கல் திட்டம்:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வங்கிகளை விட அதிக வட்டியும் அளிக்கப்படுவதால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். வருங்கால வைப்பு நிதி, கிராம சுரக்ஷா யோஜனா, செல்வ மகள் சேமிப்பு, மாதாந்திர வருமான திட்டம் போன்றவைகள் மக்களுக்கு அதிக லாபத்தை அளிக்கிறது.
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதார அமைச்சர் விளக்கம்!
அந்த வகையில் கிராம சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் பாலிசிதாரருக்கு நல்ல பண பலனை அளிக்கிறது. கிராம் சுமங்கலி திட்டம் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பாலிசி தொகை அதிகபட்சம் ரூ.10 லட்சம் ஆகும். கிராம சுமங்கல் யோஜனா காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் 95 ரூபாய் சேமிப்பதன் மூலம் முதிர்வு தொகையை நீங்கள் ரூ.14 லட்சம் வரை திரும்ப பெறலாம். கிராம சுமங்கல் திட்டம் இரண்டு வகையான கால அளவை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்பு – பலன் கொடுக்கிறதா ஊரடங்கு? வெளியான அறிக்கை!
ஒன்று 15 ஆண்டுகள், மற்றொன்று 20 ஆண்டுகள். 15 ஆண்டு திட்டத்தை பொறுத்தவரை அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். 20 ஆண்டு திட்டத்தின் வயது வரம்பு 40 ஆகும். 25 வயதுள்ள ஒரு நபர் கிராம சுமங்கல் பாலிசியை தொடர்ந்தால் அவர் மாதம் பிரீமியம் தொகையாக ரூ. 2,853 செலுத்த வேண்டும். 12 மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 40% பணம் கிடைக்கும். மீதமுள்ள 40% பணம் முதிர்வு காலத்தில் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பாலிசிதாரர் இறந்தால் அவரின் நாமினிக்கு மீதி காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.