தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நிதியமைச்சர் வெளியீடு!

0
தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - நிதியமைச்சர் வெளியீடு!
தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - நிதியமைச்சர் வெளியீடு!
தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நிதியமைச்சர் வெளியீடு!

தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பும் வகையில் தேர்வுகள் நடத்த போதிய நிதி இல்லை என்று நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசு தேர்வுகள்:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்று அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றை தொடர்ந்து TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்த தேர்வுகளை பெரும்பாலானோர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

SBI vs HDFC vs ICICI vs YES வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வைப்பு நிதி வட்டி விபரங்கள்!

ஆனால் இதுவரை எவ்வித தேர்வு குறித்த அறிவிப்பும் TNPSC தேர்வு வாரியத்தால் வெளியிடப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு TNPSC தேர்வு வாரியம் தமிழக அரசு தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயம் என்று அரசானை வெளியிட்ட பிறகே தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது தமிழகத்தில் அரசுப் பணிகளில் 10 முதல் 15 லட்சம் வரை பணியாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதுவரை 10 லட்சத்திற்கும் குறைவானவர்களே அரசுப் பணியில் இருந்து வருகின்றனர். மீதமுள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கு போதிய நிதி அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார். அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு 2 வருடம் வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் தேர்வுக்கான அறிவிப்பு TNPSC தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு!

மேலும் TNPSC பொறுத்தவரை பல்வேறு பணிகளுக்கு சுமார் 80 தேர்வுகள் வரை நடத்த வேண்டியுள்ளது. அத்தனை தேர்வுகள் நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று ஆகும். அதனால் கூடிய விரைவில் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசுகையில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழக அரசுப் பணிகளில் சேர்வதற்கான வாய்ப்பை குறைக்கும் விதமாக தமிழ் மொழிப்பாட தேர்ச்சியை கட்டாயமாக்கி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!