அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்பிப்பு!
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தலைமை தபால் நிலையத்தில் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள் இதனை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் சான்றிதழ்:
இந்தியாவில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை அவர்களது வயது முதிர்ந்த காலத்தில் பேருதவி புரிகிறது. வேலையை விட்டு நின்ற பின் பொருளாதார ரீதியாக யாருடைய உதவியும் இல்லாமல் அரசு வழங்கும் பென்ஷன் தொகை மூலம் வாழ்க்கையை நடத்தலாம். பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும்
தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நிதியமைச்சர் வெளியீடு!
ஓய்வுதாரர்கள் வயது முதிர்ந்த காலத்தில் பரவி வரும் பெருந்தொற்றுக்கு மத்தியில் அலுவலகத்திற்கு சென்று ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது என்பது சவாலாக ஒன்றாக இருந்து வருகிறது. அதனால் இவர்களுக்கு உதவும் வகையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அஞ்சல்காரரிடம் உங்கள் ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு விவரம் போன்றவைகளை சமர்ப்பித்து கைரேகையை பதிவு செய்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
SBI vs HDFC vs ICICI vs YES வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வைப்பு நிதி வட்டி விபரங்கள்!
அதனை தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டத்தில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க சிறப்பு முகாம் இன்று சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் இன்று காலை, 10 முதல் மாலை, 3 மணி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 8667521689 என்ற எண்ணின் மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை தொடர்பு கொள்ளலாம்.