ஜூன் 1, 7 ஆகிய தேதிகளில் கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி காலை வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மாதம் இறுதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு ஜூன் 1 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், மருந்து போன்ற அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் காலை 8 முதல் 11 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி – ஜூன் 8 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!!
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கானது நாளையுடன் (ஜூன் 1) முடிவடைவதால், இந்த கட்டுப்பாடுகளை ஜூன் 9, காலை 6 மணி வரை நீட்டிப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுமுடக்க காலத்திலும் அத்தியாவசிய சேவைகளுக்கு சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் மளிகை பொருட்கள் விநியோகத்துக்காக ஜூன் 1 மற்றும் ஜூன் 7 ஆகிய 2 நாட்கள் மட்டும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர புத்தகங்கள் மற்றும் இதர எழுதுபொருட்களின் கடைகள் ஜூன் 1 ஆம் தேதி மட்டுமே திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் மாநிலத்தின் அமைச்சரவை மந்திரி சுபோத் யூனியல் தெரிவித்துள்ளார்.