வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி – ஜூன் 8 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!!
பீஹார் மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிர பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு தொடர்ந்து ஜூன் 8ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா தொற்று காரணமாக பீஹார் மாநிலத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மே 5ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஜூன் 1ம் தேதியுடன் தற்போதைய கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ளது.
காலை 6 மணிமுதல் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
இந்நிலையில், மாநிலத்தில் தொற்று பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 1,475 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்பு நேர்மறை விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்த போதிலும், வரும் ஜூன் 8ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் வணிக நடவடிக்கைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புகள் குறைவாக உள்ள பகுதிகளில் வணிகம் தொடர்ந்து செயல்பட அரசு தளர்வு அளித்துள்ளது. மக்கள் அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.