காலை 6 மணிமுதல் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் இன்று (மே 31) முதல் மேலும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர முழு ஊரடங்கில் சில தளர்வுகளையும் அம்மாநில அரசு அளித்துள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தெலுங்கானா அரசு மேலும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது அம்மாநிலத்தில் மட்டும் நேற்று (மே 30) ஓரு நாளில் 1,801 புதிய கொரோனா பாதிப்புகளும், 16 உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் 35,042 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நோய் பரவலை மேலும் கட்டுப்படுத்த மே 12 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு இன்றுடன் (மே 31) முடிவடைவதால், மேலும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டித்ததுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் – மாநில அரசின் கட்டுப்பாடு!!
இந்த பொதுமுடக்க காலத்தில் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த தேவைகள் முடித்து வீடுகளுக்கு திரும்பும் நபர்களுக்காக கூடுதலாக 1 மணி நேரம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தெலுங்கானாவில் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ், ‘உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது தவிர தெலுங்கானா மாநிலத்தில், 7 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Fine welcome good decision
Always I request the editor, mention the heading clearly by state. Don’t misguide and waste our time