தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் – கல்வித்துறை ஆலோசனை!!
ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை எப்படி வழங்குவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
புத்தகம் வழங்கல்:
தமிழகத்தில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் முறையாக இயங்க பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணாக்கர்களின் கல்வியும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கும். இந்நிலையில் நாளை முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் நிலையில் இதுகுறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
ஜூன் 1, 7 ஆகிய தேதிகளில் கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
ஆனால் புதிய கல்வி ஆண்டிற்கு பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து பாட புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் இயங்காத நிலையில் மாணவர்களுக்கு புத்தகங்களை எப்படி வழங்குவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உஷா ஆலோசனை நடத்தினார்.
TN Job “FB Group” Join Now
இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இயக்குனர் ஜெயந்தி, தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்னும் சில தினங்களில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் புத்தகங்கள் சென்றடைந்து விடும் நிலையில் இதனை ஆசிரியர்கள் மூலம் மாணாக்கர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.