இனி அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர் – உற்பத்தி நிறுவனங்களுக்கு மார்ச் 2025 வரை காலக்கெடு!
இந்தியாவில் அனைத்து வித ஸ்மார்ட் போன்களுக்கும் USB-C Charging Port-ஐ கொண்டு வர வேண்டும் என அரசு, மொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான காலக்கெடுவும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் போர்ட்:
இந்தியாவில் இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தனித்தனியாக தங்களுக்கு என்று ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட் போன்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட் இருக்காது. நீங்கள் தேர்வு செய்து வாங்கும் ஸ்மார்ட்போன்களை பொறுத்து சார்ஜிங் பாயின்ட் மாறுபடுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் மத்திய அரசு அனைத்து மொபைல் போன்களுக்கும் ஒரே வித சார்ஜரை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது குறித்து அனைத்து மொபைல் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என்றும் நிறுவனங்களிடம் வலியுறுத்தினர்.
உங்கள் பான் கார்டு எடுத்து பல வருடம் ஆகிவிட்டதா? அப்டேட் செய்ய வேண்டுமா? – இதோ உரிய விளக்கம்!
Exams Daily Mobile App Download
ஏற்கனவே இந்த ஒரே சார்ஜிங் போர்ட் முறையை ஐரோப்பா அரசு ஆலோசனை செய்துள்ளது. இந்த முறை வரும் 2024 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அரசும் ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் 2025 முதல் மொபைல் போன்களுக்கு USB – C சார்ஜிங் போர்ட் இருப்பதை மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.