UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு தேதி வெளியீடு!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது SFIO, CBI, NIA ஆகிய மத்திய அரசு நிறுவனங்களில் நடைபெறவுள்ள Combined Recruitment Test-க்கான தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
UPSC தேர்வு தேதி வெளியீடு:
SFIO, CBI, NIA போன்ற அரசு அலுவலகங்களில் Public Prosecutor, Prosecutor, Assistant Director ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான 96 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் UPSC ஆணையத்தால் நடத்தப்படும் Combined Recruitment Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு நடைபெற்ற உள்ள நாள் ஆனது இன்று (30.09.2023) வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
IBPS CRP Clerks – XII 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
இத்தேர்வானது வருகின்ற அக்டோபர் மாதம் 07ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தேர்வானது ஆஃப்லைன் முறையில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த கூடுதல் தகவலை UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://upsc.gov.in/-ல் காணலாம்.