UPSC Mains 2022: தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) கடந்த செப்டம்பர் மாதத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு குடிமைப்பணி தேர்வின் முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில் எப்போது இத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது குறித்து பார்ப்போம்.
தேர்வு முடிவுகள்
நாட்டின் IAS, IPS, IFS, குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குடிமைப்பணி தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இப்பணியிடத்திற்கு முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்காணல் ஆகிய 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் இப்பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.
Follow our Instagram for more Latest Updates
இத்தேர்வை சுமார் 11.52 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 23ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வை எழுத தகுதியுடைவர்கள். அதன்படி இவர்களுக்கு முதன்மை தேர்வின் தாள் 1 முதல் 5 வரையிலான தேர்வு செப்டம்பர் 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதே போல் இந்திய மொழித் தேர்வு செப்டம்பர் 24ம் தேதியிலும், விருப்ப பாடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 25ம் தேதியிலும் நடைபெற்றது.
தமிழகத்தில் ஆளுநர் R.N. ரவி பதவி நீக்கம்.. வலுக்கும் கோரிக்கை – முற்றும் ஆன்லைன் ரம்மி விவகாரம்!
Exams Daily Mobile App Download
இதையடுத்து இத்தேர்வின் முடிவுகளுக்காக தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முதன்மை தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தை சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.