தமிழகத்தில் ஆளுநர் R.N. ரவி பதவி நீக்கம்.. வலுக்கும் கோரிக்கை – முற்றும் ஆன்லைன் ரம்மி விவகாரம்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக அதிக அளவிலான மோசடிகள் நடந்து மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கான தடை சட்டம் குறித்து பிரச்சனை எழுந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி:
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் ஆரம்பத்தில் விளையாடும் நபர்களுக்கு பணம் கிடைப்பது போல் காண்பித்து, சிறிது நாட்களில் அவர்களின் நம்பிக்கையை வளர்த்து, மெல்ல அவர்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் சுருட்டும் மோசடி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் பணம் கிடைப்பதால் விளையாடும் நபர்களும் நம்பி அதிக பணத்தை அதில் செலுத்துகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இது ஒரு அளவிற்கு மேல், மிகவும் தீவிரமான நிலையை அடைகிறது. அதாவது, விளையாடும் நபர்கள் பணம் கொடுக்க மறுத்தால், அவர்களின் தகவல்கள் திருட்டப்பட்டு, அதை சொல்லி மிரட்டல் விடுகின்றனர். ஒரு அளவிற்கு மேல் பணம் கொடுக்க முடியாமல் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக தமிழக அரசு அக்.19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஹாப்பி நியூஸ்.. தமிழகத்தில் டிச.6ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதற்கான சட்ட மசோதா காலம் நவ.27 ஆக இருந்தது. ஆனால், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய ஆளுநர் ரவி அவர்கள், அதற்கான பதிலை தமிழக அரசு அளித்தும், அதற்கான ஒப்புதல் அளிக்காமல், இருந்ததால், சட்ட மசோதா காலாவதியாகி விட்டது. இதனால் ஆளுநர் ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.