ஹாப்பி நியூஸ்.. தமிழகத்தில் டிச.6ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நடப்பு ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். இதனை கருத்தில் கொண்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த தீப விழாவை காண தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். அந்த வகையில் நடப்பு ஆண்டு தீபத்திருவிழா வரும் டிசம்பர் 6ம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று காலை பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து டிசம்பர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை (டிச.06) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை – வானிலை மையம் தகவல்!!
Exams Daily Mobile App Download
மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து அறநிலையத்துறை சார்பாக கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர ஏதுவாக போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.