விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பரபரப்பான ட்விஸ்ட் ரிலீஸ்!
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடர் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தற்போது பார்வதியை கடத்தி சென்றுள்ள நிலையில், திருப்பங்கள் நிறைந்த ப்ரோமோ ஓன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிர்களின் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.
ப்ரோமோ வெளியீடு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து TRP யில் முன்னிலை சீரியலாக வளர்ந்து வருகிறது. இதன் பிறகு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ரீச் கிடைத்துள்ளது. இந்த சீரியலில் விக்கியை வைத்து, எப்படியாவது பார்வதியின் திருமணத்தை நிறுத்தி பாஸ்கருக்கு அர்ச்சனாவின் தங்கச்சியை திருமணம் செய்து வைக்கலாம் என அர்ச்சனா திட்டம் போட்டார். ஆனார் அவருடைய திட்டத்தை தவிடுபொடியாக்கும் வகையில் பாஸ்கருக்கும், பார்வதிக்கும் திருமணம் முடிந்தது.
இனி எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது என்று நினைக்கையில் பார்வதியை யாரோ கடத்தி சென்று விட்டார்கள். பார்வதியை யார் கடத்திருக்க முடியும் என்று நினைக்கையில் விக்கியின் மீது அனைவரின் சந்தேகம் திரும்பியது. பிறகு போலீஸ் ஸ்டேஷனில் பார்வதியை காணவில்லை என சந்தியா புகார் கொடுத்தார். அப்போது, போலீஸ் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கிறதா என கேட்க விக்கியின் அப்பா மேல் தான் சந்தேகமாக இருக்கிறது என சந்தியா கூறுகிறார். இருப்பினும் விக்கியின் அப்பா இந்த வேலையை செய்யவில்லை. சரவணன் கடையில் வேலை செய்து வந்த செல்வம் ஒரு தீவிரவாதி. செல்வம் பற்றிய உண்மை பார்வதிக்கு தெரிந்து விட்டது. அதனால் பார்வதியை கடத்தி விட்டார் செல்வம்.
அது மட்டுமல்ல, பார்வதியை மனித வெடிகுண்டாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். குடும்பத்தை கொன்று விடுவேன் என்று பார்வதியை மிரட்டி சம்மதிக்க வைக்கிறார். இந்நிலையில் சந்தியாவுக்கு ஏற்கெனவே செல்வம் மீது சந்தேகம் வந்து விட்டது. இந்நிலையில் ராஜா ராணி இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில், சந்தியாவின் கையில் ஒரு Pendrive கிடைத்துள்ளது. அதை சந்தியா போலீஸ் அதிகாரியிடம் கொடுத்து இந்த Pendrive எங்க வீட்டில் கிடைச்சுது என்று கொடுக்க, அதை செக் செய்து பார்த்தால் அதில் ஒரு கோவிலின் புகைப்படமும், பார்வதியின் புகைப்படமும் உள்ளன.
பின்பு போலீஸ் சந்தியாவிடம், அந்த கோவிலில் வெடிகுண்டு வைக்க போறத எங்களுக்கு தகவல் வந்திருக்கு. இந்த தகவலுக்கும் உங்க வீட்டு பொண்ணு பார்வதிக்கு ஏதோ சம்பந்தம் இருக்கு என்றார். இதை கேட்டு சந்தியா அதிர்ச்சியில் உறைந்தார். இனி எப்படி பார்வதியை காப்பாற்ற போகிறார் சந்தியா என்பதை பார்க்க தான் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.