திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பிப்.8 முதல் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை!
கொரோனா தொற்று காரணமாக ரயில்களில் முன்பதிவில்லா இருக்கை வசதி பயணிகளுக்கு அளிக்கப்படாமல் இருந்து வந்தன. ஆனால் தற்போது கோவை – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை வசதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் தொற்று தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளன. கடந்த 2 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவும் திறன் அனைத்து மாநிலங்களில் குறைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, ரயில்களில் முன்பதிவில்லா இருக்கை வசதியை அளிக்க முடியாத நிலை இருந்து வந்தன.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் – அமைச்சர் அறிவிப்பு!
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678) ரயிலில் 4 பெட்டிகள் ஜன.20 முதல் முன்பதிவில்லா பெட்டிகளாக இயக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் HRA மற்றும் DA 3% உயர்வு – முக்கிய விவரங்கள்!
இதனை தொடர்ந்து கோவை – திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்:22616) ரயிலில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் 6 பெட்டிகள் முன்பதிவில்லா பெட்டிகளாக இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பயணிகள், பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை கவுண்ட்டரில் பெற்று கொள்ளலாம். இந்த முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டாலும், பயணிகளுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.