தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு – அக்.6 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர அலகு தேர்வு நாளை முதல் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அலகுத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். நோய் பரவும் விகிதத்தை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவில் ‘0’ மதிப்பெண் – பெற்றோர்கள் அதிர்ச்சி!
தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தாக்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
YouTube செயலியில் வரப்போகும் புதிய சிறப்பம்சம் – பயனர்கள் உற்சாகம்!
இந்நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர அலகுத்தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் இத்தேர்வுகள் மாவட்ட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களிலேயே வினாத்தாள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இணையதளம் வழியாக அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்றும் இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பள்ளிகளில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.