10ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவில் ‘0’ மதிப்பெண் – பெற்றோர்கள் அதிர்ச்சி!

1
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவில் '0' மதிப்பெண் - பெற்றோர்கள் அதிர்ச்சி!
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவில் '0' மதிப்பெண் - பெற்றோர்கள் அதிர்ச்சி!
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவில் ‘0’ மதிப்பெண் – பெற்றோர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பு பதிவில் 0 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு பதிவு:

கடந்த 2020 – 2021 கல்வியாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தோற்று பாதிப்பு குறைந்த ஜனவரி மாதத்தில் பொதுத்தேர்வு எழுத இருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்த பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.

YouTube செயலியில் வரப்போகும் புதிய சிறப்பம்சம் – பயனர்கள் உற்சாகம்!

முன்னதாக பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பின் 2ம் அலை தீவிரமடைந்ததால் பொதுத்தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் செய்யப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய பொதுத்தேர்வு மற்றும் 12ம் வகுப்பு அலகுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்ச்சி என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது.

Reliance Jio நிறுவனத்தின் புதிய ஆபர் – 22 GB கூடுதல் டேட்டா உடன்!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவும் நடைபெற்று வருகிறது. ஆனால் வேலைவாய்ப்பு பதிவு இணையத்தில் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் 0 மதிப்பெண் என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், மாணவர்களின் பதிவெண்ணை உள்ளிட்டால் அனைத்து பாடங்களுக்கும் 0 மதிப்பெண் என்று வருகின்றது. இதனால் மற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில் இந்த கல்வியாண்டின் மாணவர்கள் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!