தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொடக்க நிலை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு 1 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு – அக்.6 முதல் தொடக்கம்!

இதற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் கொரோனா முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு என்பது பதற்றமான சூழலை உருவாக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை தூண்டுவது ஆசிரியருக்கு பெரும் பணியாக அமையும்.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவில் ‘0’ மதிப்பெண் – பெற்றோர்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் ஆசிரியர் மாணவர்களை முதலில் பள்ளி இயல்புக்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு வாசித்தல் எழுதுதல் போன்றவைகளை ஆரம்பித்து பின் பாடங்களை தொடங்க வேண்டும். மாணவர்களின் மன நலனில் அக்கறை கொண்டு ஆசிரியர்கள், எல்லா பள்ளியிலும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளை திறக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அரசு பள்ளிகளை திறக்கும் முடிவில் பின் வாங்க கூடாது. தகுந்த முன்னேற்பாடுகளுடன் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று திருவாரூர் அரசு பள்ளி ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!