நாடு முழுவதும் செப்டம்பர் 5ம் தேதிக்குள்..! மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடியது.நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. நோய் தொற்று பரவும் விகிதத்தை குறைக்க மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பல்வேறு இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வந்தது.
சாம்சங் நிறுவனத்தில் சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 3 ஆண்டுக்குள் திட்டம்!
தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் செப் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும். அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாநிலங்களுக்கு இந்த மாதம் மத்திய அரசு வழங்கும் இலவச தடுப்பூசி போக மீதம் கையிருப்பில் 2 கோடி தடுப்பூசிகள் உள்ளன. ஆசிரியர் நாளான செப்டம்பர் 5-க்கு முன்னதாக முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசுகளிடம் கோரியுள்ளதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 59.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.