சாம்சங் நிறுவனத்தில் சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 3 ஆண்டுக்குள் திட்டம்!
சாம்சங் நிறுவனம் பல லட்ச கோடி ரூபாய் செலவில் அதன் இணை நிறுவனங்களில் புதிய விரிவாக்கத்தை செயல்படுத்த உள்ளது. அதனால் வரவுள்ள 3 ஆண்டுகளில் சுமார் 40,000 பேரை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
உலகமெங்கிலும் தற்போது கொரோனா தொற்று பாதிப்பானது 2 ஆம் அலை, 3 ஆம் அலை என பெருகி வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு மத்தியில் பல தனியார், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணிகளை மீண்டுமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா பேரிடர் காலத்தில் இடை நிறுத்தப்பட்டதான வேலை வாய்ப்புகளும் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்தியாவில் உள்ள சில முன்னணி IT நிறுவனங்களும் அதன் வளாகங்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்தியா வரும் ஆப்கான் மக்களுக்கு இ-விசா கட்டாயம் – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
இந்நிலையில் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் தற்போது 205 பில்லியன் டாலர் அதாவது ரூ.15,201,732,975 என்ற இந்திய மதிப்பில் மிகப்பெரிய விரிவாக்கத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. அதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 40,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாம்சங் பயாலஜிக்ஸ் போன்ற துணை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ரோபோடிக்ஸ் முதல் பெருநிறுவன கையகப்படுத்துதல் வரையுள்ள ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி இந்நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்ட 30,000 புதிய பணிகளுக்கு மேல், இன்னும் 10,000 பேரை கூடுதலாக சேர்க்க ஆலோசித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே சாம்சங் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் நேற்று (ஆகஸ்ட் 24) ஒரு நாளில் மட்டும் 3.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த தலைமுறைக்கான தொலைத்தொடர்பு போன்ற முக்கிய பகுதிகளில் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ள சாம்சங் நிறுவனம் சிப் தயாரித்தல், ரோபோடிக்ஸ் போன்ற முக்கிய தொழில்களில் வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நிலைப்பாட்டை வலுப்படுத்த இந்த முதலீடு உதவும் என்று தெரிவித்துள்ளது.