இந்தியா வரும் ஆப்கான் மக்களுக்கு இ-விசா கட்டாயம் – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயம் இ-விசா பெற்றிருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இ-விசா:
ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகால போருக்கு பின்னர் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு அரசியலில் பதற்றம் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின் அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அமீரகத்துக்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை – தேசிய மனித உரிமைகள் ஆணையம்!
மேலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்தனர். தற்போது நிலவி வரும் கடுமையான சூழ்நிலையின் காரணமாக மக்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல முனைப்பு காட்டுகின்றனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் பாதுகாப்பு கருதி பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு விமான தளத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற முயற்சித்த போது, அதில் 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
அதுமட்டுமின்றி விமானங்களில் டயர்கள் முதலியவற்றில் பயணித்து ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பு கருதி மக்கள் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாலும், ஆப்கனில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறவும் இ-விசா முறையை இந்திய அரசு அறிமுகம் செய்திருந்தது. அது குறித்து உள்துறை அமைச்சகம் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பாதுகாப்பு கருதி இந்தியாவிற்கு வரும் ஆப்கன் மக்களும் கட்டாயம் இ-விசா பெற வேண்டும் என தெரிவித்து உள்ளது.