ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – உக்ரைன் முன்வைத்த நிபந்தனை! ஏற்குமா ரஷ்யா?
ரஷ்யா படையெடுப்பால் உக்ரைன் தலைநகர் கீவ் வில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது, இந்த நிலையில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இருப்பினும் தங்களுக்கு அந்த இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடில்லை என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் முன்வைத்த நிபந்தனை:
ரஷ்யா படையெடுப்பால் உக்ரைன் கடும் போர் பதற்றம் காணப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பிப் 24 ஆம் தேதி முதல் கடுமையான தாக்குதலை தொடங்கியது. இதனால் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் போர் 3 நாட்களைக் கடந்தும் தாக்குதல் நீட்டித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாதுகாப்புக்காக உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் நாட்டுடன், பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்!
உக்ரைனின், கார்கிவ் நகரில் இன்று காலை ரஷ்ய ராணுவத்தினர் முழுமையாக நுழைந்தனர். இருப்பினும் உக்ரைன் அரசு மக்களிடம் ஆயுதங்களை வழங்கியுள்ளதால், ரஷ்ய படைகள் மீது வீட்டில் இருந்தபடியே உக்ரைனால் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ரஷ்யாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பெலாரஸ் பயன்படுத்தப்படுவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – ஓரிரு நாட்களில் வெளியீடு!
மேலும் உக்ரைன்,போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை வார்சா, பிராட்டிஸ்லோவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு ஆகிய 5 நாட்டு நகரங்களில் ஏதாவது ஒரு நகரில் நடத்தலாம் என ரஷ்யாவுக்க்கு பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்ய படைகள் தரப்பில் இருந்து, உக்ரைனில் கெர்சான், பெர்டியான்ஸ்க், கெனிஷெஸ்க், செர்னோபேவ்கா ஆகிய 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், உக்ரைன் படைகளின் ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும், 471 உக்ரைன் வீரர்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட உள்ளது. அத்துடன், சரணடைந்த உக்ரைன் வீரர்களை தகுந்த மரியாதையோடு நடத்த உள்ளதாகவும் தேவையான உதவிகளை செய்ய உள்ளதாகவும் ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளது