தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – ஓரிரு நாட்களில் வெளியீடு!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுக்கான கால அட்டவணை தயாராகியுள்ளது. இந்த அட்டவணையை 2 நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
பொதுத்தேர்வு கால அட்டவணை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2 ஆண்டுகளாக சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழி வகுப்புகள் நடந்தன. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பிப் 1ல் இருந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் நடந்து முடிந்தது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
மேலும் முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் முடித்து, மார்ச 14 தேதிக்குள் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று பிரச்சனையால் தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவருக்கும், ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது. இருப்பினும் நடப்பு ஆண்டு கண்டிப்பாக பொதுதேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மாலை 5 மணி முதல் காலை 8 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து, பொது தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வி அமைச்சர் நேற்று மாலை வெளியிடுவதாக இருந்தது. இருப்பினும் அறிவிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் பொது தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.