ஆதார் துறையின் கீழ்வரும் UIDAI நிறுவனத்தில் இருந்து ஜனவரி மாதம் வெளியான அறிவிப்பில் Senior Account Officer, Accountant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 28.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளதால் விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Senior Account Officer, Accountant ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ளது.
- B.Com அல்லது MBA டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு – தேர்வு ஒத்திவைப்பு!
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அரசு நிறுவனத்தில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
- இந்த ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு pay Matrix Level – 05, 10 என்ற ஊதிய அளவுகளின் படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.
- Senior Account Officer, Accountant பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
UIDAI விண்ணப்பிக்கும் விதம்:
இந்த UIDAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 28.03.2024 அன்று வரை மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறவும்.
Download Notification & Application Form PDF