தண்ணீரை வீணடித்தால் ரூ.5000 அபராதம் – நீர் வழங்கல் வாரியம் உத்தரவு!

0
தண்ணீரை வீணடித்தால் ரூ.5000 அபராதம் - நீர் வழங்கல் வாரியம் உத்தரவு!

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை:

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் பெங்களூரு நகருக்கு தேவையான நீரை வழங்க பெங்களூரு நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் சிரமத்தில் இருந்து வருகிறது. கடும் பற்றாக்குறை காரணமாக டேங்கர் லாரிக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட அளவு மற்றும் தூரத்தை கணக்கிட்டு டேங்கர் லாரிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் அடுத்த நான்கு மாத காலத்துக்கு 200 தனியார் டேங்கர் லாரிகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் டேங்கர் லாரி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பழிப்பு வழக்குகளில் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் – நீதிமன்றம் தகவல்!

இதே போல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தோட்டம் அமைத்தல், கட்டுமானம், பராமரிப்பு, வாகனம் கழுவுதல் போன்றவற்றுக்கு குடிநீரை பயன்படுத்துவோருக்கு ரூபாய் 5000 அபராதமாக விதிக்கப்படும் என்றும், இதே போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் கூடுதலாக ரூபாய் 500 சேர்த்து அபராதம் விதிக்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!