பலாத்கார வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்தான உத்தரவை காவல்துறையினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்ற அறிவுறுத்தல்:
பலாத்காரம் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது அரசு நிலையான செயல்பாடு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோவாவில் உள்ள பம்பாய் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் எஃப் ஐ ஆர் ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள மனுதாரரின் விசாரணையின் போது முடிவெடுக்க விசாரணை அதிகாரி யார் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வயதில் குழந்தை பிறந்துள்ளதாகவும், இதற்காக 15 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க மனுதாரர் முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆதார் அட்டையை எத்தனை முறை அப்டேட் செய்யலாம்? – UIDAIன் கட்டுப்பாடுகள் இதோ!
எனினும் குழந்தையின் எதிர்காலம் குழப்பத்தில் இருக்கக் கூடாது என்றும், குழந்தையின் நலனை அக்கறையில் கொண்டு செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. காவல்துறையினர் நிலையான செயல்பாடு வழிமுறைகளிலிருந்து விலகி செல்லக்கூடாது, அவ்வாறு விலகி செல்லும் பட்சத்தில் குழந்தையின் நலன் சார்ந்த சில வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.